பொள்ளாச்சி சம்பவங்களை பிரதிபலிக்கும் ‘கருத்துக்களை பதிவு செய்’
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியன் வன்முறை சம்பவம் உலகம் முழுவதையும் உலுக்கி விட்டது. இந்த சம்பவங்களை பிரதிபலிக்கும் படமாக ‘கருத்துகளை பதிவு செய்’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.
எம் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கு இந்த படத்தில் கலையுலகின் லட்சிய நடிகர் என்று போற்றப் பட்ட பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் அவர்களின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் அனைவருமே புதுமுகங்கள் தான்.
கதை, திரைக்கதை, வசனத்தை ராஜசேகர் எழுத ‘ஜித்தன் 2’, ‘1 A M’ ஆகிய படங்களை இயக்கிய ராகுல் இப்படத்தை இயக்குகிறார்.
எப்படி முந்தைய இரண்டு படங்களையும் ஹாரர் டைப் படங்களாக கொடுத்தாரோ அதேபோல இந்தப்படத்தையும் ஹாரர் டைப் படமாகவே தரவிருக்கிறார்.
”ஹாரர் டைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு என்பதை நம்புகிறவன் நான். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. சமூக வலை தல மான பேஸ்புக் பற்றியது தான் இந்த படம். பேஸ்புக்கில் அறிமுகமாகி நண்பர்களாக பழகி ,காதலர்களாகி பின் அவனிடம் தன் கற்பை இழந்த பெண். அதோடு அந்த பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்யும் கொடூரமானவனிடமிருந்து தப்பி வந்த பெண் என்ன முடிவெடுக்கிறார், என்ன மாதிரியான தண்டனையை அவனுக்கு கொடுத்தாள் என்பது தான் கதை.
பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் பலவற்றை என் “கருத்துக்களை பதிவு செய்” படத்தில் நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடையும் கட்டத்தில் இருக்கும் சூழலில் பொள்ளாச்சி சம்பவம் பெரிதாக வெடித்திருக்கிறது. நானும் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு தான் என்பதை அப்போதே பதிவு செய்திருந்தேன்.
பெத்தவங்க பிள்ளைகளுக்கு போனை வாங்கிக் கொடுப்பதாக நினைக்கிறாங்க. இல்லவே இல்லை “பிசாசத்தான் வாங்கி கொடுக்கிறாங்க” . அந்த வகையில் இன்றைய பேஸ்புக், இணையதளம், மற்றும் சமூக வலைதள காதல்கள் எல்லாமே பெண்களை சிக்க வைக்கும் அபாய வலை என்பதை சொல்லும் படம் தான் இது. படம் விரைவில் வெளிவர உள்ளது” என்றார் இயக்குனர் ராகுல்.