இனிமே ஆதியும், ஹன்சிகாவும் ‘பார்ட்னர்’!
ஒரு காலத்தில் தேடி வந்த வாய்ப்புகளையெல்லாம் வாரிப்போட்டுக் கொண்டு நடித்துக் கொண்டிருந்த ஹன்சிகா பெரும்பாலான படங்கள் தோல்வியைத் தழுவியதால் இடையில் சுத்தமாக பட வாய்ப்பே இல்லாமல் இருந்தார்.
தற்போது மீண்டும் ‘மகா’ உட்பட சில படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பவர் இனி நல்ல கதையம்சமுள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறாராம்.
அப்படி எண்ணிக்கையை விட கதை தான் முக்கியம் என்று அவர் நடிக்கும் புதிய படத்துக்கு ‘பார்ட்னர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
ஆதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை RFC கிரியேஷன்ஸ் சார்பில் S.P.கோலி தயாரிக்கிறார். ஹன்ஷிகா இப்படத்தில் நடித்தாலும் ஆதிக்கு ஜோடி அவர் இல்லை. குப்பத்து ராஜா படத்தில் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்த பாலக் லல்வாணி தான் ஆதிக்கு ஜோடியாக நடிக்கிறார்.
‘டோரா’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய மனோஜ் தாமோதரன் இப்படத்தை இயக்குகிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். படத்தைப் பற்றி இயக்குநர் மனோஜ் தாமோதரனிடம் கேட்டபோது,”இப்படம் முழுக்க முழுக்க காமெடியை அடிப்படையாக கொண்டது. அதே சமயம் படத்தில் சயின்ஸ் பிக்ஷன் கலந்த ஒரு பேண்டசி விசயமும் இருக்கிறது. அது ரசிகர்களை வெகுவாக கவரும்.
படத்தில் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் இருக்கும். நடிகர் ஆதிக்கு இப்படம் அவரது சினிமா கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். மேலும் ஆதியின் ஜோடியாக நடிக்கும் பாலக் லல்வாணி உள்பட படத்தில் பங்குபெறும் அத்தனை கதாபாத்திரங்களும் பெரிதாகப் பேசப்படும். இந்தப் பார்ட்னர் நிச்சயம் பக்கா எனர்ஜிடிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் மூவியாக இருக்கும்” என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையோடு துவங்கியது.