கார்ப்பரேட் அநியாயங்களை தோலுரித்துக் காட்டப்போகும் சமுத்திரகனி!

Get real time updates directly on you device, subscribe now.

தொழில் வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் இயற்கை விதிமீறல்களுக்கு அளவே இல்லை.

அதிலும் சமீபகாலமாக இயற்கை வளங்களை சூறையாடும் விதமாக அத்தனை திட்டங்களோடும் ஆளும் அரசுகளோடு கைகோர்த்துக் கொண்டு களமிறங்கியிருக்கின்றன கார்ப்பரேட் நிறுவனங்கள்.

அப்படிப்பட்ட கார்ப்பரேட் களவாணிகளின் அநியாயங்களை தோலுரிக்கும் விதமாக தயாராகி வரும் படம் தான் ‘பெட்டிக்கடை’.

லஷ்மி கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார்.

இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். இதில் அவர் சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக வருகிறார். இன்னொரு நாயகனாக ‘மொசக்குட்டி’ வீரா நடிக்கிறார்.

சாந்தினி, சுந்தர் அஸ்மிதா, வர்ஷாவும் என மூன்று பேர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத், ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

Related Posts
1 of 5

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் – இசக்கி கார்வண்ணன்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது ”நாம் ஒவ்வொரு தெருவிலும் பார்க்கும் பெட்டிக்கடைகள் தான் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்பட வைக்கும் காரணிகள்.

ஒரு பெட்டிக்கடை வைத்திருப்பவர் எந்த சாதிக்காரர்களாக இருந்தாலும் எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் நாம் அன்பாக “அண்ணாச்சி”, “பாய்”, “செட்டியார்” என்று எதோ ஒன்றை சொல்லி அழைப்போம்.

அந்த தெருவில் நடக்கும் நல்லது கெட்டதுகளுக்கு அந்த கடைக்காரரும் ஒரு அங்கமாக இருப்பார். வியாபாரி வாடிக்கையாளர் என்பதை மீறி ஒரு உறவு சங்கிலி இருக்கும். இந்த சங்கிலியை அறுத்து எறிந்தது கார்ப்பரேட் முதலாளிகள்.

சாதாரண பெட்டிக்கடையில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் குறைந்த அளவு கொள்முதல் செய்து உடனே விற்று விடுவதால் யாருடைய சுகாதாரமும் பாதிப்படைவதில்லை. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக கொள்முதல் செய்து மெதுவாக விற்பனை செய்வதால் சுகாதார சீர்கேடு. இது புரியாமல் ஆடம்பர மோகம் கொண்டவர்களால் எப்படியெல்லாம் பெட்டிக்கடை உறவு சங்கிலி அறுபட்டது என்பதையும் கார்ப்பரேட் அட்டூழியத்தையும் தோலுரித்து காட்டும் படமே பெட்டிக்கடை என்றார்.

படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடை பெற உள்ளது.