ஓ மை காட்! : ராணாவுக்கு மனைவியாகிறார் ஸ்ரேயா
எதற்காக வடிவேலுவுடன் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடினோம் என்று இப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாராம் நடிகை ஸ்ரேயா.
‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு வடிவேலுவுடன் டான்ஸ் ஆடினார் ஸ்ரேயா. அதோடு அவருடைய மார்க்கெட்டே ஆட்டம் கண்டு விட்டது.
அதன்பிறகு எந்த ஹீரோவும் ஸ்ரேயாவுடன் நடிக்க விரும்பவில்லையோ என்னவோ? புதுப்பட வாய்ப்புகள் வருவது சுத்தமாக குறைந்து விட்டது.
இதனால் ஃபேஸன் ஷோக்களில் தலை காட்டுவது, கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடுவது என்று காசு பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்படிப்பட்டவரைத் தேடி வந்திருக்கிறது ‘பாகுபலி’ இரண்டாம் பாக வாய்ப்பு.
ஆமாம், ‘பாகுபலி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஸ்ரேயாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.
இதில் ராணாவுக்கு மனைவி கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது ஸ்ரேயா பொருத்தமாக தெரிந்ததால் அவரையே நடிக்கை வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.
இப்படித்தான் ‘த்ரிஷ்யம்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கானுக்கு மனைவியாக நடித்தார் ஸ்ரேயா. மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளின் ரீமேக்கிலும் ஹிட்டான அந்தப்படம் ஹிந்தியில் மட்டும் அட்டர் ப்ளாப் ஆகி விட்டது.
ஸ்ரேயாவின் மனைவி செண்டிமெண்ட் ‘பாகுபலி2’ வுக்கு ஹிட் செண்டிமெண்ட்டாக செட்டானால் சரி தான்!