தமிழ்சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர் கலைஞர்! – சிவகுமார்

Get real time updates directly on you device, subscribe now.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

1. பெரியார், ராஜாஜிக்கு பிறகு 95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.

2. பெரியார் – எந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்துக்கு திட்டங்கள் தீட்டினாரோ அவற்றை கலைஞர் அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனே நிறைவேற்றினார்.

3..அண்ணா அவர்கள் துவங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கட்டிக்காத்தவர்.

4. அரசியலில் சாதித்ததற்கு இணையாக – கலை இலக்கியத்திலும் 60 ஆண்டுகளுக்கு மேல் சாதனை புரிந்தவர்.

Related Posts
1 of 6

5.1950 களில் தமிழ்சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர்களில் முதன்மையானவர்.

6.குறளோவியம், சங்கத்தமிழ், தொல்காப்பியப்பூங்கா போன்றவை அவரது புலமைக்குச் சான்றானது .

7. பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் படங்களில் அவர் எழுதிய வசனங்களைப் பேசி நடித்தேன். ‘என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள். அவருடைய ஆன்மா சாந்தி அடையட்டும்’.

8. என் ஓவியங்களை பார்க்க 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் இல்லம் வந்து 2 மணி நேரம் இருந்தார் .

9. சூர்யாவின் முதல் படம் ‘நேருக்கு நேர்’ படத்தையும், கார்த்தியின் முதல் படம் ‘பருத்தி வீரன்’ படத்தையும் பார்த்து ஆசி கூறியவர் .

10.தமிழகத்தில் அவர் இடம் என்றும் காலியாகவே இருக்கும். அன்னாரது ஆத்மா சாந்தியடையவும், பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்துத் கொள்கிறேன்.