10 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ஆண்டனிக்காக பாடிய கே.ஜே.யேசுதாஸ்
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “தமிழரசன்”. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
பாபு யோகேஸ்வரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு கட்டமாக நடைபெற்று முடிவடைந்தது. அதிரடி ஆக்ஷன் படமான இந்த படத்திற்காக இளையராஜா இசையில் ஜெயராம் எழுதிய
“பொறுத்தது போதும்
பொங்கிட வேணும்
புயலென வா” என்ற புரட்சிகரமான பாடலை பிரபல பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவானது.
”2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த ‘பழசிராஜா’ என்ற மலையாள படத்தில் பாடிய யேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இந்த தமிழரசன் படத்தில் பாடியது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மரியாதை” என்கிறது படக்குழு.
முன்னதாக பாடலைப் பாட சென்னையில் உள்ள இளையராஜாவின் இசைக்கூடத்துக்கு வந்த கே.ஜே யேசுதாஸுக்கு இளையராஜாவும் இயக்குனர் பாபு யோகேஸ்வரனும் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர். படத்தில் விஜய் ஆண்டனி பாடும் இந்தப்பாடல் புரட்சிகரமான பாடலாக திரையில் ஒலிக்கப் போகிறது.