வில்லன் அவதாரம் எடுக்கும் ‘ஜித்தன்’ ரமேஷ்

Get real time updates directly on you device, subscribe now.

துவரை ஹீரோவாக படங்களில் நடித்து வந்த ஜித்தன் ரமேஷ் முதல் முறையாக புதுப்படம் ஒன்றில் அதிரடி வில்லன் கேரக்டரில் நடிக்கிறார்.

யஷ்வந்த் கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ரவி செளத்ரி, நாகார்ஜுனா இந்தப்படத்தை தயாரிக்கிறார்கள்.

‘மதுரை வீரன்’, ‘புலி வருது’, ‘நீ வேணும்டா செல்லம்’ உட்பட பல படங்களில் நாயகனாக நடித்தவர் ஜித்தன் ரமேஷ். நீண்ட நாட்கள் படங்களில் நடிக்காமல் பட தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு இருந்த அவர் மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் பக்கா வில்லனாக நடிக்கிறார்.

படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. கதாநாயகனாக சாய் நடிக்கிறார். கதாநாயகியாக வங்காளத்தை சேர்ந்த ஈனா என்ற புதுமுகம் நடிக்கிறார்.

மற்ற நட்சத்திரங்கள் இன்னும் முடிவாக வில்லை. இன்று சென்னையில் தி பார்க் ஹோட்டலில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு துவங்கியது.

Related Posts
1 of 134

ஜித்தன் ரமேஷுடன் ஏராளமான அழகிகள் ஆடிப்பாடுவது மாதிரியான பாடல் நடன இயக்குனர் பிரேம் ரக்‌ஷித் நடன அமைப்பில் படமாக்கப்பட்டது.

படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வம்சி கிருஷ்ணா மல்லா. இவர் இயக்கும் முதல் படம் இது.

வேகமாக வளர உள்ள இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு முழுவதும் கோவாவில் நடக்க உள்ளது. கதாநாயகன் பொறுப்பிலிருந்து ஏன் வில்லனாக நடிக்கிறீர்கள் என்று ஜித்தன் ரமேஷிடம் கேட்டோம்…

”படம் திரைக்கு வந்தவுடன் இந்த கேள்வி வராது சில மாதங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தேன். இயக்குனர் கேரக்டரை சொன்னவுடன் இந்த காரக்டரை விடக் கூடாது என்று முடிவெடுத்து ஓ.கே சொன்னேன்.

சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் ஹீரோவா வில்லனா ? அது மாதிரி தான் என் கேரக்டரை சொல்லனும்னா “ஹை வோல்டேஜ் வில்லன்” என்று சொல்லலாம் என்றார் ஜித்தன் ரமேஷ்.