கொட்டுக்காளி- விமர்சனம்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கூழாங்கல் படமெடுத்த வினோத்குமார் இந்தக் கொட்டுக்காளியில் என்ன சொல்கிறார்?
சூரிக்கு தனது தாய்மாமன் மகளான முறைப்பெண்ணை கல்யாணம் முடிக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், அந்த தாய்மாமன் மகள் வேறோரு இளைஞனை காதலிக்கிறாள் என்பது சூரி குடும்பத்திற்கு தெரியவருகிறது. “வசியம் செய்ததால் தான் இந்தப் பிள்ளை இப்படி இன்னொருத்தனை விரும்புகிறாள்” என்று சூரியின் குடும்பம் நம்புகிறது..அதனால் அன்னாபென்-ஐ ஒரு சாமியாரிடம் அழைத்துச் செல்கிறார்கள்.அதன் பிறகு என்ன என்பதே கதை
கதையின் நாயகன் அல்ல..கதையின் வில்லனாக நடித்துள்ளார் சூரி. ஒரு ஆட்டோ காட்சியில் அவர் ஆடியுள்ள ஆட்டம் வேறலெவல். அன்னாபென் வெறும் பார்வையாலே பல உணர்வுகளை கடத்துகிறார். தாய்மாமன், அப்பா, அத்தை, தங்கைகள் என சூரியின் உறவுகளாக வரும் அனைவரும் கச்சிதமான தேர்வு
காட்சிகள் வழியே கதை சொல்ல வேண்டும் என இயக்குநர் அதிகம் மெனக்கெட்டுள்ளதால் நிறைய விஷுவல்ஸ் கதைகளாக படமெங்கும் விரவிக்கிடக்கிறது. எதார்த்த சினிமாக்களுக்கு இந்த கொட்டுக்காளியை பாடமாக வைக்கலாம். அதே நேரம் பார்வையாளரின் நேரத்த்தை மதிக்கும் போக்கு திரைக்கதையில் இல்லை. கால்மணி நேரத்தில் சொல்ல வேண்டியதை ஒன்றரை மணிநேரமாக இழுத்துள்ளனர். ஒரு காமன் ஆடியன்ஸுக்கான படமாக கொட்டுக்காளியை மாற்றியிருந்தால் நல்லாருந்திருக்கும்
3/5