”அடுத்த படத்திலும் அவுக தான்” : லட்சுமிமேனனை துரத்தும் இயக்குநர்!
அப்படி என்ன தான் செண்டிமெண்ட்டோ தெரியவில்லை. தொடர்ந்து தனது படங்களில் லட்சுமிமேனனையே நாயகியாக்கி அழகு பார்க்கிறார் இயக்குநர் முத்தையா.
குட்டிப்புலி, கொம்பன் என தனது முதல் இரண்டு படங்களிலும் லட்சுமிமேனனை நாயகியாக்கிய இயக்குநர் முத்தையா மூன்றாவது படமான மருது படத்திலும் அவரையே நாயகியாக்க நினைத்தார். ஆனால் ஹீரோ விஷால் ஓ.கே சொல்லாததால் ஸ்ரீ திவ்யாவை கமிட் செய்து படத்தை எடுத்து முடித்தார்.
இப்போது நான்காவதாக மீண்டும் சசிகுமாரை வைத்து படம் இயக்க நினைத்திருக்கும் அவர், படத்தில் நாயகியாக தனது ஆஸ்த்தான நடிகையான லட்சுமிமேனனையே கமிட் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம்.
ஏற்கனவே இயக்குநர் முத்தையாவுக்கும், லட்சுமிமேனனுக்கு லவ்வு, கிவ்வு என்று கோடம்பாக்கம் ஜிவ்வாகிக் கிடக்க தனது படங்களில் தொடர்ச்சியாக லட்சுமிமேனனுக்கு வாய்ப்பு கொடுப்பது பெருத்த சந்தேகத்தை கிளப்பி விட்டிருக்கிறது.
காதல் புலி!