‘பன்றிக்கு நன்றி சொல்லி’ – நம்புங்க இது சினிமா பட டைட்டில் தான்!
ஹெட் மீடியா ஒர்க்ஸ் விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில் பாலா அரனின் இயக்கத்தில் அறிமுக நாயகன் நிஷாந்த் நடிப்பில் ‘பன்றிக்கு நன்றி சொல்லி’.
அரிதான ‘புதையல் வேட்டையை’ மையமாக கொண்டு இப்படம் தயாராகிறது. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை, தேடிச் செல்லும் பயணமே இப்படத்தின் கதை. பலர் இந்த சிலையை தேடிக் கொண்டிருக்க, அது குறித்த ஒரு முக்கிய குறிப்பு நாயகனை வந்தடைகிறது. இதை தெரிந்து கொண்ட இருவர், நாயகனை துரத்த, சுவராசியமான பல திருப்பங்களுக்கு பின்னர் அவர்கள் அந்த சிலையை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பதே இப்படத்தின் கதை.
முழுக்க முழுக்க நகைச்சுவையோடு உருவாகியிருக்கும் இத்திரைப்படம் இதுவரை அணுககப்படாத விலக்கப்பட்ட அல்லது இருண்ட காமெடி வகையை சார்ந்தாலும், ஜனரஞ்சகமாக தற்கால சூழலுக்கு ஏற்ற வகையில் படமாக்கப்பட்கி இருக்கிறார் இயக்குனர் பாலா அரன். ஒரு நல்ல கதைகளத்திற்கு உரிய வரவேற்பையும், ஆதரவையும் தமிழ்சினிமா எப்போதும் தந்து வந்திருக்கிறது என்பதால் இப்படம் முழுவதுமே புதுமுகங்கள் வலம் வருகின்றனர்.
படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, சுரேன் விகாஷ் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு ராம்-சதீஷ் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.