கொதித்தெழுந்த பிரபலங்கள்/ பின் வாங்கிய அரசு
“இனி தனிநபர்கள் யாரும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கக்கூடாது என்றும், பணமாக தர இருப்பவர்கள் அரசுக்கு அனுப்ப வேண்டும் என்றும், பொருளாக தர இருப்பவர்கள் அரசு அதிகாரிகளிடம் தான் ஒப்படைக்க வேண்டும் என்று நேற்று அரசுத்தரப்பில் கூறப்பட்டது. அரசின் இந்த அறிவிப்பை மு.க ஸ்டாலின் கடுமையாக எதிர்த்தார். கமல்ஹாசனும் தன் பங்கிற்குப் போட்டுத்தாக்கினார். அதன் பின் வைரமுத்து உள்பட தன்னார்வலர்கள் பலரும் அரசின் முடிவில் உடன்பாடில்லை என்ற கருத்தை முன் வைத்தார்கள். எதிர்ப்பு வலுத்ததால் இப்போது ஏழைகளுக்குத் தன்னார்வலர்கள் உதவி செய்யலாம் தடையேதும் இல்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மட்டும் தான் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அரசின் மூலமாகத் தான் நிவாரணம் சென்று சேர வேண்டும் என்றும் முடிவெடுத்தால் நம் நாட்டில் நிறைய வயிறுகள் பட்டினி தான் கிடக்கும்!