தயாரிப்பாளர் சங்கத்துக்கு நிதி திரட்ட ‘இசையராஜா 75’ பிரம்மாண்ட விழா!
தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக ‘இசையராஜா 75’ விழா என்ற பிரம்மாண்ட இசை விழாவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இத்தனை ஆண்டு காலம் இசையில் தொடர் சாதனை புரிந்து வரும் ‘இசைஞானி’ இளையராஜாவைப் கௌரவிக்கும் பொருட்டு இவ்விழாவை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது.
வருகிற பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. (YMCA) மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ‘இசையராஜா 75’ விழாவிற்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளை சார்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.
இதன் முதல் கட்டமாக தமிழ் திரையுலக பிரமுகர்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை சார்ந்தவர்கள் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
விழா நடைபெறும் 2 நாட்களுக்கு அனைத்து படப்பிடிப்புகளுக்கும் விடுமுறை விடப்பட்டு இந்த பிரம்மாண்ட விழா இரண்டு நாட்கள் ஒய். எம்.சி.ஏ வில் நடைபெறுகிறது.